ஆழ்ந்த படிப்பு, பழக்கங்கள், முறைகள்

எழுதுதல் எவ்வளவு முக்கியம் ?
படிப்பதில் பல படிநிலைகள் இருக்கின்றன ,அதாவது ஆங்கிலத்தில் layer by layer என்பார்கள். ஒரே நாளில் முழு வீச்சில் ஒரு தலைப்பைக் கற்று அதில் தெளிவு பெற முடியாது சீரான இடைவெளியில் குறைந்தது 25 முறையாவது படித்து ஒப்பிட்டுத் திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ( 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் ) இந்தச் செயலுக்கு நீங்கள் எழுதி வைக்கும் குறிப்புகள் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் படிப்பதை விட எழுதுதல் என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும், அதாவது உங்கள் கையெழுத்தில் உள்ள குறிப்புகளை பார்க்கும் போது அந்தப் பாடம் எளிதாகத் தோன்றும்.
ஒருதலைப்பைப் பற்றி படிக்கும் போது தொடர்ந்து அடுத்த அடுத்த நாட்களிலும் அதனைத் தொடரவேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த மாதிரியான சமையங்களில் முந்தைய நாள் படித்தவற்றை முழுவதுமாக நினைவு கூற முடியாது எனவே படிக்கும் போதே குறிப்பெடுப்பது இதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். எழுதி வைக்கும் குறிப்புகளைத் திறம்பட கையாள்வது ஒரு கலை அதனை ஒருமுறைக் கற்று தெளிந்தால் பின்னர் வாழ்நாள் முழுவது மறக்க மாட்டீர்கள்.
ஒரு தலைப்பில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதற்கு எழுதுதல் அவசியம். ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்து எழுதுவது என்பது அந்த விஷயத்தை மற்றொருவருக்கு விளக்கிச் சொல்வதற்க்கு சமம். இந்தச் சிறப்பியல்பின் காரணமாகத் தான் இன்றளவிலும் கல்விநிறுவனங்களில் தேர்வுகள் நடைமுறையில் உள்ளது. இது என்றுமே மாறாது. தேர்வு என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது எழுதுவதைப் பற்றி தான் , அந்த அளவுக்கு எழுதுதல் முக்கியம். இது objective type exam களுக்கும் பொருந்தும் , GATE தேர்விலும் கூட எழுதுவதற்கு scribble pad ஒன்றைக் கொடுப்பார்கள்.
எழுதுவதைப் பழக்கிக்கொள்ள நிறைய நோட்டு புத்தகங்கள் தேவைப்படும் விலை அதிகம் ஆகும் எனக் கவலை வேண்டாம்.
அதற்கும் ஒரு வழி இருக்கிறது , stationary மொத்த விலைக்கடையில் 500 பக்கங்கள் கொண்ட A3 size paper bundle ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள் விலை ரூ 420 ஆகும் , பின்னர் அதை நூறு நூறு பக்கங்களாகப் பிரித்து A4 அளவில் போடுவது போல பக்கவாட்டில் spiral binding செய்து கொள்ளுங்கள். spiral ஒன்றுக்கு முப்பது ரூபாய் ஆகும். மொத்தம் 570 ரூபாயில் ஒரு வருடத்திரக்குத் தேவையான , தரமான 500 A3 பக்கங்கள் ( 1000 A4 பக்கங்கலுக்கு சமம் ) கொண்ட குறிப்பேடுகள் தயாராகிவிடும்.பேனா மொத்தமாக வாங்கினால் அடக்கவிலை 3 ரூபாய் வரும். ஒட்டுமொத்தமாக 750 ரூபாயில் நீங்கள் தங்குதடையின்றி எழுத முடியும்.
உடல்நலத்தில் கவனம்
ஆழ்ந்து படிக்கும் பொது உடலில் பசி தன்மை அதிகரிக்கும் இருந்தாலும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு மற்றும் மனதுக்குச் சந்தோஷம் தரக்கூடிய ஒன்று கல்வியாக மட்டும் தான் இருக்க வேண்டும்.
உதாரணத்திரக்கு நீங்கள் IISC மற்றும் IIT போன்ற கல்விநிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவை யூட்டூப் வலைதளத்தில் பார்க்கலாம் அதில் பட்டம் பெரும் மாணவர்கள் பெரும்பாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.அதற்குக் காரணம் கேண்டீன் உணவு சரியில்லை என்பதாக அர்த்தம் இல்லை , அவர்களுக்கு உணவை விட கல்வியின் மீது தான் அதிக நாட்டம் கல்வியைத்தான் அவர்கள் ருசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ்ந்து படிக்கும் பயிற்சி என்பது ஒரு தியான நிலைப் போன்றது , இதனால் நீங்கள் தனியாகத் தியானப்பயிற்சி பெற வேண்டியதில்லை. இதனால் உங்கள் நடத்தையில் நிறைய நல்லவிதமான மாற்றங்கள் ஏற்படும், பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.
பகல் பொழுதுகளில் படிப்பதை வாடிக்கையாகக் கொள்ளவேண்டும். இரவு நேர உறக்கத்தைத் தவிர்ப்பது ஒருதுறையில் ஆழ்ந்த அறிவைப் பெற விரும்புபவர்களுக்கு நல்லதல்ல. அதைபோல நேர உறக்கமும் அன்றாட திட்டங்களைப் பாதிக்கும். பகல் நேரத்தில் உறக்கம் வராத அளவுக்கு இரவில் உறங்க வேண்டும்.
பகலில் இயற்கையான வெளிச்சத்தில் அமர்ந்து படித்தால் நல்லது ,தனிமை அவசியம், நமக்குப் பரிட்சியமானவர்கள் அருகில் இருத்தல் கூடாது.அப்படி இருந்தால் அவர்களால் கவனச் சிதறல் ஏற்படும். முன் பின் தெரியாதவர்களால் பிரச்சனையில்லை.
ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்து இருத்தல் அவசியம் ,அப்படி அமர்ந்தவாரே நேரத்தைக் கழிப்பது உங்களுக்கு நிச்சயம் சிரமமாக இருக்கும். அதனைச் சரிசெய்ய Posture Corrector belt ஒன்றை வாங்கி உபயோகியுங்கள்.
முடிந்தால் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 20 வினாடிகள் dead hangs செய்து பழகுங்கள். இதனால் முதுகுவலி மற்றும் உங்கள் posture இல் ஏதும் மாற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம்.
படிக்கும் பொது மேசையின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்தால் தலையைக் கவிழ்த்துக்கொண்டு வெகுநேரம் செலவிடமுடியாமல் போகும் எனவே eye sight 45 டிகிரி க்கும் கீழ் நோக்கி போகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
எப்படி ? படிக்க வேண்டும்
ஒரு தலைப்பைப் பற்றி படிக்கத் தொடங்கும் முன் அதனைப் பற்றிய அனைத்து keyword களையும் சேகரிக்க வேண்டும். பின்னர் அதனை வரிசைபடுத்தி ஒவ்வொன்றாகப் படித்து தெளிவு பெறவேண்டும். மேலும் ஒன்றை ஒன்று எவ்வாறு சம்பந்த படுத்துகிறது என்று பார்த்து வரைபடம் வடிவிலான குறிப்பு எடுக்க வேண்டும் அதற்கு மனவரைபடம் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.ஒரு chart அட்டை ஒன்றை வாங்கி அந்தப் படத்தில் உள்ள மொத்த keyword களையும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்று வரைந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த chart ஐ வைத்து rivision செய்ய எளிதாக இருக்கும். revision ஐ பொறுத்தவரையில் அச்சு வடிவிலான புத்தகங்களைவிட கையெழுத்து வடிவிலான குறிப்புகள் தான் அதிகம் பலன் தரும்.
படித்ததை விட அதை உபயோகத்தில் வைப்பது மிக முக்கியம் அதன் முதல் செயல்முறை நினைவு கூர்ந்துகொண்டே இருப்பது , குறிப்புகளை பார்த்துக்கொண்டே revision செய்வதை விட எதையும் பார்க்காமல் நினைவு கூர்ந்துக் கொள்ள பழக்கிக்கொள்ளுங்கள்
மேலும் ஒரு பாடத்தைப் படிக்கும் போது அதனை படிப்படியாகப் புரிந்து கொள்வது சிறந்தது முதலில் ஒரு தலைப்பைப் படிக்கும் போது அதற்குத் தேவையான அடிப்படைகளில் தெளிவாக இருக்க வேண்டும். அந்தத் தலைப்பை உள்வாங்கிய பின்னர் இரு தலைப்புகள் இடையே உள்ள தொடர்பு மற்றும் கலவையான, சிக்கலான தலைப்புகள் எனப் படிப்படியாக முன்னேறி செல்லவேண்டும். இப்படிச் செய்யும் போது எளிதாக உணருவீர்கள். Concepts-ஐ முதலில் உங்கள் மொழியில் புரிந்து கொள்ளுங்கள்.
பிறகு standard English terminology-யை slowly absorb பண்ணலாம்.
உங்கள் note-ஐ bilingual-ஆக வைத்தால் (tamil + english ) தடுமாறமாட்டீர்கள்.
படிப்பது அவ்வளவு கடினமா ?
படிக்கும் பயிற்சி பொதுவான பார்வையில் கடினமானதாக தோன்றும் இதற்குப் பல காரணங்கள் உள்ளன அதில் சிலவற்றைப் பார்ப்போம் ,எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான IQ ஒரே வயதில் வராது இது அறிவியல் பூர்வமான உண்மை , அதைக் கண்கூடாக நீங்களே பார்க்கலாம்.
For reference,: Intelligence_quotient
ஒரு சிலவற்றை உங்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லையென்றால் அதை விட்டுவிட்டு புரியும் மற்ற பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது பின்னர் அடுத்த ஆண்டோ அல்லது ஒரு சில ஆண்டுகள் கழித்தோ உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த IQ ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இதனால் தான் தேர்ச்சி மதிப்பெண்ணாக பள்ளிகளில் நூற்றுக்கு 35 % வும் கல்லூரி களில் 45% யும் வைத்து உள்ளனர். ஜப்பானிலும் ,அமெரிக்காவிலும் தேர்ச்சி அடைய பெறவேண்டிய மதிபெண் 60 %,
for reference Academic_grading_in_Japan , Academic_grading_in_america
இதனால் IQ குறைவாக உள்ளவர்கள் அப்படியே இருந்துவிடுவார்கள் என்று அர்த்தம் கிடையாது , ஒரே வயதுடைய இரு மாணவர்கள் வெவ்வேறு வயதில் அவர்களுக்கான IQ வின் உச்சத்தை அடைகிறார்கள் என்பது தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். முறையாகப் பயிற்சி பெற்றால் அதனை எளிதாக அடைந்துவிடலாம் ஒருவர் 15 வயதில் செய்ய முடியாததை 20 வயதிலோ அல்லது 30 வயதிலோ எளிதாகச் செய்யலாம். இதற்கு இந்திய கல்வி அமைப்பு அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் நாட்டில் கல்வி பயில எந்தப் பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.
மேலும் இந்திய கல்வித்துறைத் தொடர்பான தகவல்களுக்கு லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது . தமிழில் மொழிபெயர்த்துப் படித்துக்கொள்ளவும்.
for reference national education policy of india , https://www.education.gov.in/sitemap: https://www.education.gov.in/sitemap
மேலும் அமெரிக்கக் கல்வி துறைத் தொடர்பான தகவல்களுக்கு








.jpg)



